Thursday, December 26, 2019

ஒரு நிமிடம்

TAMILSJKT

வணக்கம் நண்பர்களே,

கடந்த சில நாள்களாக நண்பரகள் சிலர் ஏன் என் வலைமணையில் எந்த ஒரு பதிவும் இல்லை எனக் கேட்டுக் கொண்டிருந்தனர். இவ்வாண்டு உண்மையில் எதுவும் பதிய வேண்டுமா என்ற கேள்வி. சிலர் இருப்பர். ஒரு துரும்பைக்கூட அசைத்திருக்க மாட்டார்கள். ஒரு வெற்றுத் தாளையும் பகிர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால், எதற்கெடுத்தாலும் 'ஷேர்'. ஆண்டுக் கூட்டத்திலிருந்து, செயலறிக்கை, பயிற்சித்தாள்கள் இப்படிக் கூறிக் கொண்டே போகலாம். ஆனால், அவர்களின் பங்கு எதுவும் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு பதிவில் நான் கருத்துச் சொல்லப் போக, அந்த மெத்தப் படித்த அறிவாளி, என்னைக் குறை கூறத்தொடங்கினார். நான் எங்குப் போனாலும் கோப்புகளை மற்றவர்களிடமிருந்து எடுத்துக் கொண்டு ( அதாவது 'காப்பி') செய்து கொண்டு வருகிறேன் என்று! அந்த அளிவாளியைப் பாராட்டியே ஆக வேண்டும். நான் அப்படிப் பிச்சை எடுத்து வருபதெல்லாம் எனக்காக அல்ல. என் வலைப்பதிவில் அனைவரும் பயனபெற வேண்டுமென நினைத்து அவற்றைப் பதிகிறேன். அதுகூட தெரியாத அறிவிலியா அவர்! இறைவா, அந்த மாணவர்களைக் காப்பாற்று.