விளக்கக் கட்டுரை எழுதுவது எப்படி ? சில மாதிரிக் கட்டுரைகள்

விளக்கக் கட்டுரை எழுதுவது எப்படி  என்ற இந்தப் பதிவு மாணவர்கள் விளக்கக் கட்டுரையை முறையாகவும் சரியாகவும் எழுத உதவும்.

வழிகள்;
- மாணவர்கள் தலைப்பைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.
- தலைப்பின்  தேவைக்கேற்ப கட்டுரை எழுதுதல் அவசியம்.
- தங்கள் கட்டுரை கட்டுரையின் தேவையை ஒட்டி வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்து கொள்க.

எடுத்துக்காட்டு;

வாசிப்பின் அவசியம்

முன்னுரை;
வாசிப்பு என்றால் என்ன ?
வாசிப்பின் மூலங்கள் என்ன என்று கூறலாம்.

கருத்து 1
பொது அறிவு வளரும்
 - பொது அறிவு வளரும் என்பது முதன்மைக் கருத்து. அதை எவ்வாறு
   விவரிப்பது என்று அறிக.
   இரண்டு கேள்விகள் :
       அ. எப்படி
      ஆ  என்ன நன்மை

எ.கா. :
   - பொது அறிவு வளரும்
      -- எப்படி - நாளிதழ், வார, மாத இதழ் போன்ற பலதரப்பட்ட வாசிப்பு மூலங்களைப் படிப்பதால் ஒருவரின் பொது அறிவு விசாலமடையும்.
( விவரிக்கவும்)
     - இதனால், மாணவர்கள் கிணற்றுத் தவளை போல் அல்லாமல் பல விடயங்ள் அறிந்தவராக இருப்பர். இதனால், கட்டுரை எழுதுவதில் மட்டுமன்றி, உரை நிகழ்த்துவதிலும் தங்கள் ஆளுமையை வெளிப்படுத்தலாம்.

கருத்து 2: 
மொழி வளம் பெருகும்
 - எவ்வாறு என்று விவரிக்கவும்
 - அதனால் என்ன நன்மை என்று விளக்கவும்

கருத்து 3 :
 வாசிப்புச் சரளமாகும்
 - எவ்வாறு வாசிப்புச் சரளமாகும்
 - அதனால் அவருக்கு என்ன நன்மை என்று விளக்குவும் , விவரிக்கவும்.

கருத்து 4:
எழுத்துத்திறன் மேம்படும்
- எவ்வாறு ஒருவரின் எழுத்துத் திறன் மேம்படும்
- அதனால் அவருக்கு என்ன நன்மைகள் ஏற்படும் என்று விளக்கவும்.

முடிவுரை
- வாசிப்புத் தொடர்பாக மாணவர்கள் தங்கள் கருத்துகளை எழுதலாம்.
எ.கா.;
'தொட்டணைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றணைத் தூறும் அறிவு' என்பதற்கு ஏற்ப,  வாசிப்பு ஒருவரின் பொது அறிவை வளர்ப்பதோடு, மிகச் சிறந்த பொழுது போக்காகவும் திகழ்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

1 comment: