Monday, November 30, 2015

TAMILSJKT
வணக்கம். அண்மையில் ஒருவர் கேட்டார். 'நீங்கள் இங்குப் பதியும் மாதிரி வினாக்கள், பயிற்சிகள் போன்றவை அருமையாக இருக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றிலும் உங்கள் வலைமனை பக்கத்தைப் போட்டு விடுகிறீர்கள். அதனால் மாணவர்களுக்குப் படி (photastat) எடுத்துக் கொடுக்க சிரமமாக இருக்கிறது,'' என்று !
என்ன சொல்ல...இங்குப் பதியப்படுபவற்றைப் பலர் பார்வையிட்டுத் தரவிறக்கம் செய்து கொள்கிறார்கள். நன்று. அதற்காகத்தானே பதிகிறேன். பலர் அதற்காக நன்றிகூட கூறுவதில்லை. பரவாயில்லை. சிலரோ இங்குப் பதியப்படுபவற்றைப் பதிவிறக்கம் செய்து, அடியில் என் பெயரை அழித்துவிட்டு, தயாரிப்பு: தங்கள் பெயர் என்றும் போட்டுக் கொள்கிறார்கள். இதை எங்குப் போய் சொல்ல......
இந்த ஆண்டு (2015) யு.பி.எஸ்.ஆர்., கண்ணோட்டத்தை ஒரு பள்ளி (எனக்குத் தெரிந்து) பதிவிறக்கம் செய்து, அதைச் செய்தது அந்தப் பள்ளியின் தமிழ் மொழி பாடப் பணித்தியக் குழு என்றும், அதன் பதிப்புரிமை தங்களுக்கே என்றும் முகப்பட்டையில் போட்டுக் கொண்டனர். அதை ஓர் அழகான புத்தகமாகவும் செய்து கொண்டனர்.  அதுவும் ஒரு பெற்றோர் மூலமாக என்னடமே வந்தது..பாருங்கள் சார்... அந்தப் பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவு அருமையாக செய்திருக்கிறார்கள்..என்றும் கூறினார்.... இப்போது சொல்லுங்கள்....என் பெயரையும் என் வலைமனை பெயரையும் போடுவது தவறா?'' என்று கேட்டேன். அவர் ஒன்றும் பேசவில்லை. நீங்களாவது பேசுங்களேன்..

Wednesday, November 18, 2015

ஒரு கணம் .................







யு.பி.எஸ்.ஆர்., தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள். அதே சமயம். 6 A, 5 A, 4 A மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரையும் நாம் மறக்கலாகாது. இள வயது மாணவர்கள். அவர்களையும் பாராட்டிப் போற்ற வேண்டும். அவர்களின் உண்மையான கல்விப் பயணத் தொடக்கம் இனிமேல்தான் உள்ளது என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும். கல்வியின் மேல் அவர்களுக்கு ஒரு வெறுப்பு உண்டாகும் நிலைக்கு நாம் அவர்களைத் தள்ளக் கூடாது. புகைப்படங்கள், பத்திரிக்கைகள் என அவர்களுக்கும் நாம் இடம் தர வேண்டும்,

நிற்க...
யு.பி.எஸ்.ஆர்., தமிழ் மொழித் தாளில் குறிப்பாக தாள் 2 இல் பெரும்பான்மையான மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். வாழ்த்துக்கள். நான் பயிற்சிப் பட்டறைக்குச் சென்ற பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் பலர் அழைத்து நன்றி தெரிவித்தனர். அவர்களின் பள்ளியில் தமிழ் மொழியின் தேர்ச்சி விகிதம் நல்ல உயர்வு கண்டிருப்பதாகவும் அதிகமான மாணவர்கள் 'A' பெற்றிருப்பதாகவும் கூறினர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

மேலும் பலர், என்னுடைய இந்த அகப்பக்கம் மிகவும் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். மிக்க மகிழ்ச்சி. 

என் பணி தொடரும். இந்த அகப்பக்கம் வழி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் என்னால் முடிந்த அளவு வழிகாட்டியாய் இருப்பேன். என் பணிமனைகளைத் தொடர்ந்து நடத்துவேன். 

நன்றி.