Monday, November 30, 2015

TAMILSJKT
வணக்கம். அண்மையில் ஒருவர் கேட்டார். 'நீங்கள் இங்குப் பதியும் மாதிரி வினாக்கள், பயிற்சிகள் போன்றவை அருமையாக இருக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றிலும் உங்கள் வலைமனை பக்கத்தைப் போட்டு விடுகிறீர்கள். அதனால் மாணவர்களுக்குப் படி (photastat) எடுத்துக் கொடுக்க சிரமமாக இருக்கிறது,'' என்று !
என்ன சொல்ல...இங்குப் பதியப்படுபவற்றைப் பலர் பார்வையிட்டுத் தரவிறக்கம் செய்து கொள்கிறார்கள். நன்று. அதற்காகத்தானே பதிகிறேன். பலர் அதற்காக நன்றிகூட கூறுவதில்லை. பரவாயில்லை. சிலரோ இங்குப் பதியப்படுபவற்றைப் பதிவிறக்கம் செய்து, அடியில் என் பெயரை அழித்துவிட்டு, தயாரிப்பு: தங்கள் பெயர் என்றும் போட்டுக் கொள்கிறார்கள். இதை எங்குப் போய் சொல்ல......
இந்த ஆண்டு (2015) யு.பி.எஸ்.ஆர்., கண்ணோட்டத்தை ஒரு பள்ளி (எனக்குத் தெரிந்து) பதிவிறக்கம் செய்து, அதைச் செய்தது அந்தப் பள்ளியின் தமிழ் மொழி பாடப் பணித்தியக் குழு என்றும், அதன் பதிப்புரிமை தங்களுக்கே என்றும் முகப்பட்டையில் போட்டுக் கொண்டனர். அதை ஓர் அழகான புத்தகமாகவும் செய்து கொண்டனர்.  அதுவும் ஒரு பெற்றோர் மூலமாக என்னடமே வந்தது..பாருங்கள் சார்... அந்தப் பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவு அருமையாக செய்திருக்கிறார்கள்..என்றும் கூறினார்.... இப்போது சொல்லுங்கள்....என் பெயரையும் என் வலைமனை பெயரையும் போடுவது தவறா?'' என்று கேட்டேன். அவர் ஒன்றும் பேசவில்லை. நீங்களாவது பேசுங்களேன்..

No comments:

Post a Comment