Sunday, May 15, 2016

ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர் தொழிலாய் அறப்பணியாய் ஏற்று, கடமையாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துகள்



எங்கள் விரல்கள் பட்ட
களிமண்களும் சிற்பங்களாய்..
எங்கள் வியர்வைகள் உங்களைப்
பலவாறாக வடிவமைத்திருக்கலாம்
மருத்துவராய்.....
வழக்குரைஞர்களாய்..
பொறியியளார்களாய்...
வணிகர்களாய்..
அமைச்சர்களாய்..
எவ்வாறேனும்!

எங்களை நோக்கி வீசப்படும்
வார்த்தைகளில் காயப்பட்டும்
மறுநிமிடங்களில் மீண்டும் மீண்டும்
ஆசிரியர்களாய் ஜனித்து விடுகிறோம்
நான்கு புறங்களிலும் கல்லெறிபடும்
விநோத படைப்புகள் நாங்கள்!
காயப்படுத்தும் எந்தக் கற்களையும்
எங்கள் வகுப்பறை குழந்தைகளைத் தீண்ட
நாங்கள் வழி கொடுப்பதில்லை
உங்கள் தேர்வின் உயர்வுக்குத்
தேய்ந்து தேய்ந்தும் தேயாமலேயே
வளர்கிறோம்..

எங்கள் உலகத்தில்
நாங்கள்தாம் அனைத்துமாய்..
ஆசிரியர் என்ற எங்கள் உலகத்தில்
நாங்கள் நாள்தோறும்
பல அவதாரங்களில்..
மருத்துவர்களாய்..
வழக்கறிஞர்களாய்..
தோட்டக்காரச் செல்வங்களாய்
ஓட்டுநர்களாய்..
பயிற்றுநர்களாய்..
உலகத் தொழில்களில்
ஏதாவது ஒன்றிலுமாய் இருப்பினும்..

நாங்கள் வாழ்வதோ
இன்னொரு பெற்றோராய்
எங்களுக்கான வகுப்பறைகளில் !!!

*முனியாண்டி ராஜ்.*
 

No comments:

Post a Comment