Friday, January 8, 2016

நினைவுறுத்தல்

TAMILSJKT


வணக்கம்.

இங்குப் பதியப்படும் இலக்கண, இலக்கியப் பயிற்சிகள் மற்றும் பயிற்றிகளில் இருந்து பயிற்சிகளை எடுத்துத்  தங்கள் பெயரில் புத்தகங்கள் வெளியிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர் உழைப்பை உறிஞ்சி வாழ்வது  மிக இழிவான செயல்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இவற்றைப் பயிற்சியாக வழங்கி, அவர்களைத் தமிழ் மொழியில் சிறப்புத் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டுமென்பதே இப்பக்கத்தின் தலையாய நோக்கமாகும்.

சில வருடங்களுக்கு முன் SPM மாணவர்களுக்கு நான் செய்த பயிற்றியல் தொகுப்பு ஒன்றை ‘நண்பர்’ ஒருவர் மிகவும் கெட்டிக்காரத்தனமாக ஒரு புத்தகமாக தன் பெயரில் வெளியீடு செய்தார் என்பதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். மற்றபடி, தனிப்பட்ட முறையில் யாரையும் சாடுவது என் நோக்கமல்ல. இதனால், தனிப்பட்ட நபர் யாரும் மனவருத்தம் கொண்டால், இருகரம் கூப்பி மன்னிப்புக் கோருகிறேன்.


நன்றி.

No comments:

Post a Comment