Sunday, August 16, 2015

யு.பி.எஸ்.ஆர்.,வழிகாட்டிக் கருத்தரங்கு

இன்று (14.8.2015, வெள்ளிக்கிழமை) கிம்மாஸ் தமிழ்ப்பள்ளியில், தம்பின் வட்டார தமிழ்ப்பள்ளிகளுக்கான தமிழ் மொழி வழிகாட்டிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாணவ்ரகளுக்குத் தெளிவான விளக்கங்களும் விடையளிக்கும் நுட்பங்களும் விளக்கப்பட்டன. ஏறக்குறைய 70 மாணவர்கள் இப்பட்டறையில் கலந்து கொண்டனர்.



கிம்மாஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பட்டறையில்
 கலந்து கொண்ட மாணவர்கள்


சனிக்கிழமை 15.8.2015, சனிக்கிழமையன்று பகாவ், ஆயார் ஈத்தாம் தமிழ்ப்பள்ளியில் அவ்வட்டாரத்தைச் சார்ந்த 4 பள்ளிகளின் மாணவர்களுக்கு வழிகாட்டிப் பட்டறை நடத்தப்பட்டது. இப்பட்டறையை என் முன்னாள் மாணவர், திரு.பிரபுசங்கர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் தலைமையாசிரியர் அன்பு நண்பர் திரு.சந்திரன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் மிகத் தெளிவான விளக்கம் பெற்றதாக கூறினர்.




பகாவ் ஆயர் ஈத்தாமில் நடைபெற்ற பட்டறையில் கலந்து
கொண்ட மாணவர்களில் ஒரு பகுதியினர்.

No comments:

Post a Comment